search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன மழை"

    • சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக வீரகனூர், ஆத்தூரில் கன மழை பெய்தது.
    • இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக வீரகனூர், ஆத்தூரில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.

    ஏற்காட்டில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. மழையை தொடர்ந்து அங்கு குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. சேலம் மாநகரில் இன்று அதிகாலை லேசான சாரல் மழை பெய்தது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக வீரகனூரில 20 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஆத்தூர் 16.2, ஏற்காடு 5, பெத்தநாயக்கன்பாளையம் 5, ஆனைமடுவு 4, கரியகோவில் 2, சேலம் 0.1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 52.3 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.   

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதகளில் கன மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதகளில் கன மழை பெய்தது. குறிப்பாக வீரகனூர், தலைவாசல் பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. சேலம் மாநகரில் நேற்றிரவு சாரல் மழை பெய்தது. மழையை தொடர்ந்து குளிர்ந்த சீேதாஷ்ண நிலை நிலவியது. இன்று காலையும் மழை தூறிய படியே இருந்தது. மாவட்டத்தில் அதிக பட்சமாக வீரகனூரில் 20 மி.மீ. மழை பெய்துள்ளது. தலைவாசல் 18, சங்ககிரி 9, கெங்கவல்லி 7, கரியகோவில், பெத்தநாயக்கன்பாளையம் 6, ஆத்தூர் 3.2, தம்மம்பட்டி 2, ஆனைமடுவு 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 72.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • சிறுமலை பகுதிகளில் கனமழை பெய்ததில் 18வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது.
    • போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் இருந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரத்தில் நேற்று கனமழை பெய்தது.இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.இந்த நிலையில் நேற்று சிறுமலை பகுதிகளில் கனமழை பெய்ததில் 18வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது.

    இதனால் அரசு பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து திண்டுக்கல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின் பேரில்,வனச்சரக அலுவலர் மதிவாணன் தலைமையில்,சிறுமலை பிரிவு வனவர் சரவணன் மற்றும் வனச்சரக பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    பின்னர் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் இருந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கனமழையால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கொட்டக்குடி, பீச்சாங்கரை, குரங்கணி, உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் பெய்த கன மழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
    • கும்பக்கரை அருவியிலும் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. அருவியில் குளிக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தற்போது கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    நேற்று மாலை தொடங்கிய சாரல் மழை பின்னர் படிப்படியாக அதிகரித்து இரவில் கன மழையாக கொட்டி தீர்த்தது. பல இடங்களில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கொட்டக்குடி, பீச்சாங்கரை, குரங்கணி, உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் பெய்த கன மழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைப்பிள்ளையார் நீர் வீழ்ச்சியில் தடுப்புகளை தாண்டி தண்ணீர் செல்கிறது. பொதுமக்கள் அங்கு செல்லவோ, கால்நடைகளை அழைத்து செல்லவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சிறுவர்கள் அங்கு செல்வதை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதேபோல் பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியிலும் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. இதனையடுத்து அருவியில் குளிக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது.

    தொடர் மழை காரணமாக ஏற்கனவே மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகள் முழு கொள்ளளவை எட்டி அதில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.05 அடியாக உள்ளது. வரத்து 1565 கன அடி. திறப்பு 511 கனஅடி. இருப்பு 3629 மி.கன அடி.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 65.12 அடியாக உள்ளது. வரத்து 885 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 4658 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51.50 அடி. வரத்து மற்றும் திறப்பு 100 கன அடி. இருப்பு 366 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.60 அடி. அணைக்கு வரும் 129 கனஅடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடி.

    பெரியாறு 27.4, தேக்கடி 11.2, கூடலூர் 5.4, உத்தமபாளையம் 11.4, சண்முகாநதி அணை 6.6. போடி 5.8, வைகை அணை 30, மஞ்சளாறு 42, சோத்துப்பாறை 46, பெரியகுளம் 25, வீரபாண்டி 22.6, அரண்மனைப்புதூர் 6, ஆண்டிபட்டி 34.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கிய மழை ஒரு மணி நேரம் கன மழையாக கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
    • மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக எடப்பாடியில் 28.6 மி.மீ. மழை பெய்துள்ளது. சேலம் மாநகரில் 0.6 மி.மி. மழை பெய்தது

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கிய மழை ஒரு மணி நேரம் கன மழையாக கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மழை அந்த பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம் மாநகரில் நேற்றிரவு சாரல் மழை பெய்தது. இந்த மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக எடப்பாடியில் 28.6 மி.மீ. மழை பெய்துள்ளது. சேலம் மாநகரில் 0.6 மி.மி. மழை பெய்தது.

    • சேலத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது.
    • மதியம் 2.30 மணிக்கு சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் கன மழையாக கொட்டியது.

    சேலம்:

    சேலத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. தொடர்ந்து நேற்று மதியம் திடீரென கரு மேகங்கள் திரண்டது.

    சூறைக்காற்றுடன் மழை

    மதியம் 2.30 மணிக்கு சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் கன மழையாக கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் இரு சக்கர வகனங்களில் சென்றவர்கள் பாலங்களின் கீழ் பகுதிகளில் ஒதுங்கினர்.

    ஜங்சன், சாரதா கல்லூரி சாலை, அத்வை ஆசிரம சாலை, மெய்யனூர், இட்டேரி ரோடு, தாதாகப்பட்டி, நெத்திேமடு, கிச்சிப்பாளையம் நாராயணநகர், பச்சப்பட்டி, சேலம் பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், 4 ரோடு, 5 ரோடு, ஜங்சன், அழகாபுரம், அஸ்தம்பட்டி உள்பட பல பகுதிகளில் தண்ணீர் சாலைகளில் கரை புரண்டு ஓடியதால் வாகன ஓட்டிகள் தத்தளித்த படியே சென்றனர்.

    போக்குவரத்து நெரிசல்

    இதனால் மழை நின்றதும் பல சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி நிலவியது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். மழை நின்றதும் பாத்திரங்களில் தண்ணீரை எடுத்து அப்புறப்படுத்தினர்.

    திருவாக்கவுண்டனூர் பகுதியில் சாக்கடை கால்வாயில் இருந்து வெளியேறிய கழிவு நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் வீட்டை சுற்றிலும் கழிவு நீர் தேங்கியதால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.

    இதே போல சேலம் மாவட்ட புறநகர் பகுதிகளான சங்ககிரி, மேட்டூர், வீரகனூர் பகுதிகளிலும் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளிலும் தண்ணீர் தேங்கியது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    129.10 மழை

    மாவட்டத்தில் அதிக பட்சமாக சங்ககிரியில் 31 மி.மீ. மழை பெய்துள்ளது. மேட்டூர் 29.4, வீரகனூர் 23, தலைவாசல் 12, தம்மம்பட்டி 9, சேலம் 8.5, கெங்கவல்லி 5, ஆத்தூர் 4.2, ஆனைமடுவு 4, ஏற்காடு 3 மி.மீ என மாவட்டம் முழுவதும் 129.10 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    நாமக்கல் மாவட்டம்

    நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, குமார பாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது.

    பரமத்தி வேலூர்

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பாலப்பட்டி, மோகனூர், பாண்ட மங்கலம், கபிலர்மலை, பரமத்தி, மணியனூர், நல்லூர், சோழசிராமணி, ஜேடர்பாளையம், ஆனங்கூர், அண்ணாநகர், பிலிக்கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    பலத்த மழை

    அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்து தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் , நடந்து சென்ற பொதுமக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர் .

    அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள் , பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் கனமழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

    குளிர்ச்சி

    இந்த மழையினால் வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக திருச்செங்கோட்டில் 33 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. குமாரபாளையம் 18.2, மங்களபுரம் 5.8, கொல்லி மலை 3, ராசிபுரம் 1.3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 61.3 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. 

    • சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் இரவு வரை கன மழை பெய்தது.
    • இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் இரவு வரை கன மழை பெய்தது.

    இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இதனிடையே சேலம் மாநகராட்சி 28-வது வார்டுக்கு உட்பட்ட செவ்வாய்பேட்டை பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக அங்குள்ள அக்ரஹாரம் தெருவில் நாள்தோறும் ஏராளமான வியாபாரிகள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. ஆனால் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலைகள் அரிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

    நேற்று பெய்த மழையால் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் சிரமம் அடைந்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதினர் கூறும் போது சம்பந்தப்பட்ட அக்ரஹார தெருக்களில் சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆகிறது.

    இது குறித்து பலமுறை கோரிக்கை மனு அளித்தும் மாநகராட்சி சார்பில் சாலை அமைக்கப்படவில்லை. எனவே சாலையை சரிசெய்து தரவேண்டும் என்றனர்.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • குறிப்பாக தலைவாசல் பகுதியில் ½ மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை ெபய்தது.

    கன மழை

    குறிப்பாக தலைவாசல் பகுதியில் ½ மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது . தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைவாக இருந்தது. ேமலும் ஏற்காட்டில் வசிக்கும் மக்களும் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    31 மி.மீ. மழை

    மாவட்டத்தில் அதிக பட்சமாக தலைவாசலில் 17 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. கரியகோவில் 5, பெத்தநாயக்கன்பாளையம் 5, ஆனைமடுவு 4, கரியகோவில்1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 31 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. 

    • தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
    • பெரியாறு, வைகை, மஞ்சளாறு, சோத்து ப்பாறை, சண்மு காநதி அணை உள்ளி ட்ட அணை களுக்கும், குளங்கள், கண்மா ய்களுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகளான பெரியாறு, வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகாநதி அணை உள்ளிட்ட அணைகளுக்கும், குளங்கள், கண்மாய்களுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    முல்லைப்பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 122.75 அடியாக உள்ளது. நேற்று 1157 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 2166 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3176 மி.கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரே ட்டர்கள் இயக்கப்பட்டு 90 மெகா வாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால் வைகை அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் தற்போது 54.04 அடியாக உள்ளது. நேற்று 884 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1567 கனஅடியாக அதிகரித்து ள்ளது. அணையில் இருந்து 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2565 மி.கன அடியாக உள்ளது.

    தேவதானப்பட்டி அருகில் உள்ள 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று காலை 54.95 அடியாக உயர்ந்தது. ஏற்கனவே 2ம் கட்ட வெள்ள அபாய எச்ரிக்கை விடப்பட்ட நிலையில் இன்று காைல முதல் 3ம் கட்ட வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தற்போது அணைக்கு 47 கனஅடி நீர் வருகிறது. நீர் இருப்பு 434.30 மி.கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் தேனி, திண்டுக்கல் மாவட்ட ங்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவி டப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை முதல் அணையில் இருந்து 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதன்மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தேவதானப்பட்டி, ஜி.கல்லு ப்பட்டி, தும்மலப்பட்டி, வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளில் 5259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    மேலும் பழைய ஆயக்கட்டு பகுதியில் 3386 ஏக்கர் நிலங்களுக்கு 60 கன அடி திறக்கப்பட உள்ளது. மாவட்ட கலெக்டர் ஷஜீவனா மற்றும் பொதுப்பணித்துறையினர் பாசனத்துக்காக தண்ணீரை திறந்து விட்டனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 101.06 அடியாக உள்ளது. வரத்து 125 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 72.73 மி.கன அடி.

    கன மழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் இன்று 4- ம் நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பெரியாறு 28.6, தேக்கடி 12.6, கூடலூர் 9.8, உத்தமபாளையம் 11, சண்முகாநதி அணை 11.6, போடி 10, வைகை அணை 29, மஞ்சளாறு 21, சோத்துப்பாறை 28, பெரியகுளம் 15.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
    • இந்த நிலையில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏற்காட்டில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் புழுக்கத்தில் தவித்து வந்தனர்.

    திடீர் மழை

    இந்த நிலையில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏற்காட்டில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. விடுமுறை நாளான நேற்று அதிக அளவில் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

    இதே போல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான ஆத்தூர், கெங்கவல்லி, மேட்டூர், தம்மம்பட்டி, காடையாம்பட்டி உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்தது. மழையை தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குளிர்ந்த காற்று வீசியது.

    67.4 மி.மீ. பதிவு

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 33.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஆத்தூர் 13, கெங்கவல்லி 10, மேட்டூர் 6.2, தம்மம்பட்டி 4, காடையாம்பட்டி 1 மி.மீ என மாவட்டம் முழுவதும் 67.4 மி.மீ. மழை பெய்துள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    கன மழை

    குறிப்பாக மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான கெங்கவல்லி, மேட்டூர், ஆனைமடுவு, தம்மம்பட்டி, தலைவாசல் உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.

    சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வயல்வெளிகள் உள்பட எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. தொடர் மழையால் விவசாய பயிர்கள் செழித்து வளர்ந்து வருவதால் விவாசயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம், ஏற்காட்டில் சாரல்

    சேலம் மாநகரில் நேற்று சாரல் மழை பெய்தது. இந்த மழையால் மாநகரில் குளிர்ந்த காற்று வீசியது. ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஏற்காட்டில் நேற்று மாலையும் சாரல் மழை பெய்தது. மழையை தொடர்ந்து கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் இல்லாமல் ஏற்காட்டின் முக்கிய பகுதிகளில் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக கெங்கவல்லியில் 25 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மேட்டூர் 21.6, ஆனைமடுவு 20, தம்மம்பட்டி 15, தலைவாசல் 12, வீரகனூர் 9, சேலம் 5.3, ஓமலூர் 5, காடையாம்பட்டி 5, ஏற்காடு 4.4, கரியகோவில் 4, ஆத்தூர் 4, எடப்பாடி 3, சங்ககிரி 2.4, பெத்தநாயக்கன் பாளையம் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 136.7 மி.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.   

    • நேற்று வரை 239 கன அடியாக இருந்த வைகை அணையின் நீர்வரத்து இன்று 332 கன அடியாக அதிகரித்துள்ளது.
    • மதுரை மக்களின் குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

    மேலும் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டில் போதிய அளவில் மழைப்பொழிவு இல்லாததால் தண்ணீர் திறக்கப்பட வில்லை.

    இதனால் விவசாய பணிகளில் தாமதம் காட்டி வந்தனர். இந்நிலையில் நேற்று தேனி மாவட்டத்தில் கன மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வரை 239 கன அடியாக இருந்த வைகை அணையின் நீர்வரத்து இன்று 332 கன அடியாக அதிகரித்துள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 47.64 அடியாக உள்ளது. மதுரை மக்களின் குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 1698 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.90 அடியாக உள்ளது. அணைக்கு 417 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2430 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.16 அடியாக உள்ளது. வரத்து, திறப்பு இல்லை. இருப்பு 340.60 மி.கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.22 அடியாக உள்ளது. அணைக்கு 12 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 37.36 மி. கன அடியாக உள்ளது.

    பெரியாறு 20.4, தேக்கடி 5.8, கூடலூர் 0.8, சண்முகாநதி அணை 1, உத்தமபாளையம் 0.4, போடி 6.8, வைகை 0.4, சோத்துப்பாறை 17, மஞ்சளாறு 5.2, வீரபாண்டி 2.4, அரண்மனைபுதூர் 3.8, பெரியகுளம் 0.5 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    ×